Saturday, 16 June 2012

புளிய மரப் பேருந்து

புளிய மரப் பேருந்து 
வாரா வாராம் சுற்றுலாதான்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மூன்றாவது படிக்கும் போதே
டிரைவர் கண்டக்டர் ஆகிவிட்டோம்
போன ஊரே திரும்பவும்
சலித்ததில்லை ஒரு நாளும்


மேல்மா புளிய மரம் நிறுத்தம்
மேல்மா அம்பேத்கர் போர்டு நிறுத்தம்
பேருந்து குலுங்கியபடி செல்லும்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மேல்மா முதலியார் வீடு நிறுத்தம்
மேல்மா ஆச்சாரி வீடு நிறுத்தம்
மேல்மா கன்னியப்பன் கவுண்டன் டீ கடை நிறுத்தம்
வேகமாக குலுங்கும் கிளை
மேல்மா கூட்ரோடு வந்ததும் இறங்கி விடுவோம்


திரும்பவும் ஏறுவதற்குள்
கண்ணம்மா ஆயா
'உங்கள அள்ள துள்ள வாரிக்கினு போவ 
வாந்தி பேதி வந்து தூக்கினு போவனு' கழுவி ஊத்த 
நாலா மூலையா ஓடுவோம்,


புளிய மரம் இருந்த இடத்தில் இன்று
கண்ணம்மா ஆயா வீட்டு பாத்ரூம்
பார்த்து வெறிக்க முடிகிறது....

     - கவிஞர். கலை அமரேசன்.



No comments:

Post a Comment