Wednesday, 13 June 2012

தாகம் தீர்

உனக்கும் எனக்குமான சண்டை 
இன்று நேற்றல்ல 
உன் இயலாமையை நீ 
உணர்ந்த நாளிலிருந்து தொடங்கிற்று .

சமமான  வாழ்வுதான்
வெற்றி எனக்கு மட்டுமானது
தோல்வி உன்னை மரணத்திற்கும் துரத்தியது.
கூட்டினாய் உன் கும்பலை
புரட்டினாய் வரலாற்றை 

மனம், மொழி, மெய் என 
என்னை திடப்படுத்தினேன்
தேடுகிறாய் நீ - உன் 
திருட்டு புத்தியை.
ஒரு மாயை நிலவுகிறது. 
'உன் அநீதிக்கு முன் 
என் நீதி மண்டியிட்டதாய்'.
உளறுகிறது உன் கூட்டம்.

பேனாவும் பிடிப்பேன், 
பீயையும் அள்ளுவேன்
ஆனால் நான் திணிக்க மாட்டேன் 
உன் மீது பீயை.

மண்ணுக்கு முதல்மகன் 
மூத்தகுடி நான்தான் 
வரலாற்றில் உனக்கு 
மரியாதை செலுத்தியே ஆக வேண்டும். 
பெற்றுக்கொள்  விருதை.
'சிறந்த பீ அள்ளி.

வரலாற்றை நான் 
எப்போதும் எழுதப் போவதில்லை 
உன் மகன் இருக்கிறான் 
வக்கிர வரலாற்றை எழுத,

புறப்பட்டுவிட்டான் 
என் மகன் பூர்வகுடி 
கூர்மையான  புத்தியோடும்
கொடூரமான கத்தியோடும்

ஓடிவிடு, ஒளிந்து கொள் 
தொடை நடுங்கினால் 
தேடு! என் பேரன் 
தொல்குடி இருப்பான்
பிடித்துக்கொள் 
உடனே குடித்துவிடு 
திடம் பெறுவாய். 

முன்னேறட்டும் 
உம்மினம் 
மூத்திரம் குடிப்பதில் 
முதலிடமென.

No comments:

Post a Comment