Thursday, 14 June 2012

எழுச்சி


எம் தலைவா
எழுச்சித் தமிழ் மகனே
எழுந்து வரும் சூரியனே
எங்க நெஞ்சி வானத்துல
மொளைச்ச நட்சத்திரமே...

அங்கனுர் மண்ணுல
உதித்த என் ராசா
எங்கள காக்க வந்த
என் சேரி மகராசா
என் முறுக்கு மீசை காராமுன்னேறும் எந்தலைவா
உன் பேச்சு இடி முழக்கம்
பேரலையை வென்றுவிடும்

பார்ப்பனிய மண்ணிலே
பாராளுமன்றத்திலே
டெல்லி கோட்டையிலே
உன் உரைவீச்சு கேட்டுப்புட்டு
கன்னியாக்குமரிக் கடல்
கைத்தட்டி வாழ்த்துதடா....
          
-கவிஞர். கலை அமரேசன்.

No comments:

Post a Comment