Wednesday, 13 June 2012

நாட்டுப்புறப் பாடல் 1




 ஏரிக்கரை ஓரத்தில இளவட்டமாய் நிற்பவளே 
தேருமேல ஏறி வாரேன் திரவியமே உன்ன பார்க்க.. - அடி 
கண்டால் நானும் இருப்பேன். - உன்னை 
காணாமல் நான் துடிப்பேன்.

அத்தமக ரத்தினமே என் அழகுக்கிளி பெட்டகமே
சித்திரமே உன்னழக செதுக்குகிறேன் எந்தன் நெஞ்சில் 
தாகம் தீர்க்கும் குடமே - நீ 
தாவணிப் பூ மடமே 

வஞ்சியாளே உன் விழியால் வாலிபன் நான் வாடுறண்டி 
நெஞ்சமெல்லாம் நெறஞ்சவளே கெஞ்சிடுறேன் ஏத்துக்கடி 
வாசமுள்ள பூவே - இனி 
நீதான் எந்தன் வாழ்வே.

ஆவாரம் தோட்டத்தில ஆடி வரும் பூமயிலே
தேவாரம் பாடி வந்தேன் தேனே உன்ன பார்க்கும் முன்ன
உலவ நீயும் வாடி - என்
உசுரக் கொஞ்சம் தாடி  

No comments:

Post a Comment