Thursday, 23 April 2020
Sunday, 8 November 2015
Tuesday, 28 July 2015
எழுச்சி தீபம் அப்துல் கலாம்
முதல்
குடிமகனே
எங்கள்
அப்துல் கலாமே
நீ
பதவியில் இருந்தாலும்
இல்லையென்றாலும்
நீ
இந்தியாவின்
முதல் குடிமகன் தான்
நீ
மட்டுமே
மரணத்தை
கூட ஜனனமாய்
மாற்றியிருக்கிறாய்
நீ
திருமணம் செய்து
பிள்ளை
பெற்றுக் கொள்ளவில்லை
என்றாலும்
இறுதிவரை
பிள்ளையாகவே
இருந்தாய்
பாரதத்
தாய்க்கு
பாரதத்
தாய்
அடிமைப்பட்ட
போது அழுதாள்
அதன்
பிறகு
இப்பொழுதுதான்
அழுகிறாள்
உன்
பிரிவிற்காக
நீ
வாழும்போது
உன்
அறிவைத் தந்தாய்
நீ
இறந்த போது
உன்
உயிரையெல்லாம்
எங்கள்
இதயங்களில்
பூசிவிட்டாய்
உனக்கு
மட்டும்
எப்படி
முடிந்தது
இந்தியாவையே
குடும்பமாய்
நினைப்பதற்கு
இந்தியாவைப்
பார்க்காத
வல்லரசு
நாடுகளை
இந்தியாவைப்
பார்க்கச் செய்தாய்
ஏவுகணைச்
சோதனையை
வெற்றிகரமாய்
நடத்தி
கண்ணிற்குத்
தெரியாத
அணுவிற்கும்
நீ
நாயகனாய்
திகழ்ந்தாய்
பாரதத்தில்
பிறந்து
பாரதத்தை
மறந்தவர்கள்
நாணமடைந்தார்கள்
உன்னைப்
பார்த்த போது
பறவைகளுக்கும்
கிடைக்காத
அக்கினிச்
சிறகு
உனக்கு
மட்டும்
எப்படி
வாய்த்தது.
கனவு
காணுங்கள்
என்ற
சொற்களுக்கு
நீயே
உதாரணமானாய்
நாம்
காணும் கனவுகள்
உயர்வானால்
நாமும்
உயர்வோம்
என்பதை
நீதான்
உணர்த்தினாய்
அதற்கு
எடுத்துக்காட்டாய்
உன்னையே
உயர்த்தினாய்
நீ
உதிராத
மலர்
இந்தியாவின்
இதயம்
பாரதத்தின்
எதிர்காலத்
தூண்கள்
வலிமையாய்
இருக்க வேண்டும்
என்பதால்
தான்
குழந்தைகளின்
வழிகாட்டியாய்த்
திகழ்ந்தாய்
உனக்கு
திருக்குறளில்
பிடித்த குரல்
‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’
என்றாய்
அந்த
வெள்ளத்தனைய
மலர்
நீட்டமாய்
நீயே
மலர்ந்தாய்
அப்துல்
கலாமே
உன்
உயிர் அணையவில்லை
வாழ்கிறது
என்றும்
அணையாத
எங்கள்
எழுச்சி
தீபமாய்........
Sunday, 14 June 2015
| Jayabal. A Birthday Celebration in New Delhi. 02.12.2014 |
Monday, 15 December 2014
கவிஞர் த.சிவலிங்கம் அவர்களின் 'என் மழையில் விழுந்த பனிக்கட்டி சூடானது' கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 23, 201 அன்று திண்டிவனம் மரக்காணம் சாலை, இராஜராஜன் மகாலில் நடைபெற்றது. வரவேற்புரைஅருட்பா. ஆறுமுகம் நிகழ்த்தினார். நூலினை கவிஞர் த. பழமலய் வெளியிட, பேராசிரியர் பிரபா. கல்விமணி (எ) கல்யாணி பெற்றுக்கொண்டார். இவ்விழாவிற்கு முனைவர் இரா. இலட்சாராமன் தலைமை வகித்தார். நிகழ்வினை அ. பழனிவேலு தொகுத்து வழங்கி சிறப்பித்தார்.
Sunday, 12 October 2014
Friday, 1 August 2014
என் தேசம்
பூத்துக்
குலுங்கும்
மலர்களின்
வேர்களிலெல்லாம்
விரவிக்
கிடக்கின்றன
எம்
வியர்வைகள்......
திருவிழாக்
கோலம் காணும்
தேரோடும்
வீதியிலெல்லாம்
நிரம்பிக்
கிடக்கின்றன
எம் எச்சங்கள்........
வானுயர்ந்த
மாட மாளிகை,
கோட
கோபுரங்களிலெல்லாம்
அழுத்தி
பதிக்கப்பட்டிருக்கின்றன
எம்
அடையாளங்கள்........
ஆம்.
புல், பூண்டு, புழு, மரம், மனிதம் என
எல்லாவற்றிலும்
சூழ்ந்திருக்கின்றன
எம் சுவாசங்கள்......
இப்போது
சொல்லுவேன்
ஊர் கூட்டி
உரக்கச் சொல்லுவேன்
இது என் தேசம்
.... என் தேசம்... என் தேசம்........
Subscribe to:
Posts (Atom)







