Showing posts with label என்.எஸ். வினோத் ஜெகதீஷ் கவிதை. Show all posts
Showing posts with label என்.எஸ். வினோத் ஜெகதீஷ் கவிதை. Show all posts

Thursday, 14 June 2012

வீறுகொண்ட அரிமா



முறுக்கு மீசையுடன்
முறைக்கும் பார்வையுடைய
புலியும் சிறுத்தையும்
உன்னை பார்த்து
பெருமை அடையுமா
பொறாமை கொள்ளுமா
தெரியவில்லை எனக்கு!

புகைபடத்தில் மாத்திரம்
கண்டு இருக்கிறேன்
புரட்சியாளர் அம்பேத்கரை
இப்பூமிக்கு புரியவைத்தாய்
இப்படிதான் இருந்திருபாரென்று
உன்னை கண்டு.


பாதிஉசிரு  போயிருச்சு
சாதிக் கொடுமையில
மீதிஉசிரு  உள்ளவரை
நீதி  கிடைக்கும்வரை
போராடும் சிறுத்தை

உன்னை எண்ணி
மார்தட்டிக் கொள்வதைவிட
உன்னைப்  போல
மீசைதொட்டு முறுக்கிவிடுவதிலேயே
பெருமை கொள்ளும்
எந்தன் கரம்.

பொடைக்குது நரம்பு
உம்பேரைச் சொல்லையிலே
சுண்டுது ரத்தம்
உம்பேச்சைக் கேட்கயிலே
பொங்குது வீரம்
உம்பின்னால் நடக்கையிலே

வீறுகொண்ட அரிமா
நம்ம அண்ணன்
திருமணமுடிக்கா திருமா!
                                      
-N.S.VINODJAGADISH.