Showing posts with label கவிஞர். கலை அமரேசன்.கவிதைகள். Show all posts
Showing posts with label கவிஞர். கலை அமரேசன்.கவிதைகள். Show all posts

Saturday, 16 June 2012

புளிய மரப் பேருந்து

புளிய மரப் பேருந்து 
வாரா வாராம் சுற்றுலாதான்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மூன்றாவது படிக்கும் போதே
டிரைவர் கண்டக்டர் ஆகிவிட்டோம்
போன ஊரே திரும்பவும்
சலித்ததில்லை ஒரு நாளும்


மேல்மா புளிய மரம் நிறுத்தம்
மேல்மா அம்பேத்கர் போர்டு நிறுத்தம்
பேருந்து குலுங்கியபடி செல்லும்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மேல்மா முதலியார் வீடு நிறுத்தம்
மேல்மா ஆச்சாரி வீடு நிறுத்தம்
மேல்மா கன்னியப்பன் கவுண்டன் டீ கடை நிறுத்தம்
வேகமாக குலுங்கும் கிளை
மேல்மா கூட்ரோடு வந்ததும் இறங்கி விடுவோம்


திரும்பவும் ஏறுவதற்குள்
கண்ணம்மா ஆயா
'உங்கள அள்ள துள்ள வாரிக்கினு போவ 
வாந்தி பேதி வந்து தூக்கினு போவனு' கழுவி ஊத்த 
நாலா மூலையா ஓடுவோம்,


புளிய மரம் இருந்த இடத்தில் இன்று
கண்ணம்மா ஆயா வீட்டு பாத்ரூம்
பார்த்து வெறிக்க முடிகிறது....

     - கவிஞர். கலை அமரேசன்.



Thursday, 14 June 2012

எழுச்சி


எம் தலைவா
எழுச்சித் தமிழ் மகனே
எழுந்து வரும் சூரியனே
எங்க நெஞ்சி வானத்துல
மொளைச்ச நட்சத்திரமே...

அங்கனுர் மண்ணுல
உதித்த என் ராசா
எங்கள காக்க வந்த
என் சேரி மகராசா
என் முறுக்கு மீசை காராமுன்னேறும் எந்தலைவா
உன் பேச்சு இடி முழக்கம்
பேரலையை வென்றுவிடும்

பார்ப்பனிய மண்ணிலே
பாராளுமன்றத்திலே
டெல்லி கோட்டையிலே
உன் உரைவீச்சு கேட்டுப்புட்டு
கன்னியாக்குமரிக் கடல்
கைத்தட்டி வாழ்த்துதடா....
          
-கவிஞர். கலை அமரேசன்.