Sunday, 12 October 2014
Friday, 1 August 2014
என் தேசம்
பூத்துக்
குலுங்கும்
மலர்களின்
வேர்களிலெல்லாம்
விரவிக்
கிடக்கின்றன
எம்
வியர்வைகள்......
திருவிழாக்
கோலம் காணும்
தேரோடும்
வீதியிலெல்லாம்
நிரம்பிக்
கிடக்கின்றன
எம் எச்சங்கள்........
வானுயர்ந்த
மாட மாளிகை,
கோட
கோபுரங்களிலெல்லாம்
அழுத்தி
பதிக்கப்பட்டிருக்கின்றன
எம்
அடையாளங்கள்........
ஆம்.
புல், பூண்டு, புழு, மரம், மனிதம் என
எல்லாவற்றிலும்
சூழ்ந்திருக்கின்றன
எம் சுவாசங்கள்......
இப்போது
சொல்லுவேன்
ஊர் கூட்டி
உரக்கச் சொல்லுவேன்
இது என் தேசம்
.... என் தேசம்... என் தேசம்........
Friday, 22 November 2013
அடியே பாசக்காரி
ஏகாந்த காட்டுக்குள்ள
எனைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கும் பெண்ணே
நீ யாரு? எங்கிருந்து வர?
காட்டாற்று வெள்ளம் போல
சீறி வரும் சின்ன மச்சான்
நீ கேட்டவுடன் சொல்வதற்கு
நானென்ன உன் மச்சினியா
மச்சினியா ஆக்கிக் கொள்ள
மனசுண்டு எந்தனுக்கு – ஆனா
நீ சிரிச்ச காரணத்த
அறியாம நான் விட மாட்டேன்.
கருத்த முகத்தழகா கம்பீர தோளழகா
என்னான்னு என்னால அறிய முடியல
உன்ன பார்த்த பிறகு – என்
உதட்ட அசைக்காமல் இருக்க முடியல
எள்ளுப்பூ மூக்கழகி இளவட்ட உடலழகி
ஆரவல்லி செடியோரம் கொஞ்சம்
குந்தி பேச ஆச உண்டா?
குந்தி மட்டும் பேசிவிட்டால்
குமரி ஏக்கமெல்லாம் தீர்ந்திடுமா?
சேர்ந்து வாழ ஆசை உண்டு மச்சான்
சோதிக்காத எனை நீயும்
பேதையாலும் தாங்க மாட்டேன்.
அடியே பாசக்காரி – உன்
அளவான பார்வையில
அடையாளம் கண்டுவிட்டேன் – உந்தன்
அழகையும் அளந்துவிட்டேன்.
எழுந்து வா ஓடிப் போவோம்
எட்டு திசை போற்ற வாழ்வோம்
Sunday, 15 September 2013
சேரியில் பிறந்த சிறுத்தை
சேரியில் பிறந்த சிறுத்தை
பூரிப்போடு பொங்கி எழுந்து
ஓங்கி அடிக்கிறது
சாதி இந்துவின்
புழுபிடித்த மூளையில்
தெறித்து ஓடுகிறது
அவன் சாதி ஆணவம் - அங்கே
செத்து மடிகிறது
ஆண்டையின் அதிகாரம் .
Friday, 22 March 2013
துணிந்து எழு
அழுகைகள் ஒருபோதும் ஆபத்தை துடைப்பதில்லை
இயற்கையை அறி, எழுந்து ஓடு
உயர்வு உன் பக்கம், உண்மை உன்பக்கம்
ஏக்கங்கள் ஒருபோதும் எழுச்சியை தருவதில்லை
ஆக்கத்தை நினை, தூக்கத்தை ஓழி
மகிழ்ச்சி உன் பக்கம், மனநிறைவு உன்பக்கம்
கவலைகள் ஒருபோதும் துணிவை தருவதில்லை
உழைப்பை நம்பு உலகை புரிந்துகொள்
இன்பம் உன் பக்கம் நல்லெண்ணம் உன் பக்கம்
ஒப்பாரிகள் ஒருபோதும் துன்பங்களை துடைப்பதில்லை
துணிந்து எழு, துன்பத்தை மறந்து ஓடு
வெற்றி உன் பக்கம் வாலிபம் உன் பக்கம்
இயற்கையை அறி, எழுந்து ஓடு
உயர்வு உன் பக்கம், உண்மை உன்பக்கம்
ஏக்கங்கள் ஒருபோதும் எழுச்சியை தருவதில்லை
ஆக்கத்தை நினை, தூக்கத்தை ஓழி
மகிழ்ச்சி உன் பக்கம், மனநிறைவு உன்பக்கம்
கவலைகள் ஒருபோதும் துணிவை தருவதில்லை
உழைப்பை நம்பு உலகை புரிந்துகொள்
இன்பம் உன் பக்கம் நல்லெண்ணம் உன் பக்கம்
ஒப்பாரிகள் ஒருபோதும் துன்பங்களை துடைப்பதில்லை
துணிந்து எழு, துன்பத்தை மறந்து ஓடு
வெற்றி உன் பக்கம் வாலிபம் உன் பக்கம்
Subscribe to:
Posts (Atom)












