Saturday, 16 June 2012

புளிய மரப் பேருந்து

புளிய மரப் பேருந்து 
வாரா வாராம் சுற்றுலாதான்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மூன்றாவது படிக்கும் போதே
டிரைவர் கண்டக்டர் ஆகிவிட்டோம்
போன ஊரே திரும்பவும்
சலித்ததில்லை ஒரு நாளும்


மேல்மா புளிய மரம் நிறுத்தம்
மேல்மா அம்பேத்கர் போர்டு நிறுத்தம்
பேருந்து குலுங்கியபடி செல்லும்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மேல்மா முதலியார் வீடு நிறுத்தம்
மேல்மா ஆச்சாரி வீடு நிறுத்தம்
மேல்மா கன்னியப்பன் கவுண்டன் டீ கடை நிறுத்தம்
வேகமாக குலுங்கும் கிளை
மேல்மா கூட்ரோடு வந்ததும் இறங்கி விடுவோம்


திரும்பவும் ஏறுவதற்குள்
கண்ணம்மா ஆயா
'உங்கள அள்ள துள்ள வாரிக்கினு போவ 
வாந்தி பேதி வந்து தூக்கினு போவனு' கழுவி ஊத்த 
நாலா மூலையா ஓடுவோம்,


புளிய மரம் இருந்த இடத்தில் இன்று
கண்ணம்மா ஆயா வீட்டு பாத்ரூம்
பார்த்து வெறிக்க முடிகிறது....

     - கவிஞர். கலை அமரேசன்.



Thursday, 14 June 2012

எழுச்சி


எம் தலைவா
எழுச்சித் தமிழ் மகனே
எழுந்து வரும் சூரியனே
எங்க நெஞ்சி வானத்துல
மொளைச்ச நட்சத்திரமே...

அங்கனுர் மண்ணுல
உதித்த என் ராசா
எங்கள காக்க வந்த
என் சேரி மகராசா
என் முறுக்கு மீசை காராமுன்னேறும் எந்தலைவா
உன் பேச்சு இடி முழக்கம்
பேரலையை வென்றுவிடும்

பார்ப்பனிய மண்ணிலே
பாராளுமன்றத்திலே
டெல்லி கோட்டையிலே
உன் உரைவீச்சு கேட்டுப்புட்டு
கன்னியாக்குமரிக் கடல்
கைத்தட்டி வாழ்த்துதடா....
          
-கவிஞர். கலை அமரேசன்.

வீறுகொண்ட அரிமா



முறுக்கு மீசையுடன்
முறைக்கும் பார்வையுடைய
புலியும் சிறுத்தையும்
உன்னை பார்த்து
பெருமை அடையுமா
பொறாமை கொள்ளுமா
தெரியவில்லை எனக்கு!

புகைபடத்தில் மாத்திரம்
கண்டு இருக்கிறேன்
புரட்சியாளர் அம்பேத்கரை
இப்பூமிக்கு புரியவைத்தாய்
இப்படிதான் இருந்திருபாரென்று
உன்னை கண்டு.


பாதிஉசிரு  போயிருச்சு
சாதிக் கொடுமையில
மீதிஉசிரு  உள்ளவரை
நீதி  கிடைக்கும்வரை
போராடும் சிறுத்தை

உன்னை எண்ணி
மார்தட்டிக் கொள்வதைவிட
உன்னைப்  போல
மீசைதொட்டு முறுக்கிவிடுவதிலேயே
பெருமை கொள்ளும்
எந்தன் கரம்.

பொடைக்குது நரம்பு
உம்பேரைச் சொல்லையிலே
சுண்டுது ரத்தம்
உம்பேச்சைக் கேட்கயிலே
பொங்குது வீரம்
உம்பின்னால் நடக்கையிலே

வீறுகொண்ட அரிமா
நம்ம அண்ணன்
திருமணமுடிக்கா திருமா!
                                      
-N.S.VINODJAGADISH.

தலித் ஆதார மையம்

மதுரை , அரசரடி தலித் ஆதார மையத்தில் 31.5.2012 அன்றுஎடுக்கப்பட்ட
புகைப்படங்கள்




புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 121 வது பிறந்த நாள் ஏப்ரல் 14 2012

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தலித் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள்விழாபுகைபடங்கள்









Wednesday, 13 June 2012

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 121 வது பிறந்த நாள் ஏப்ரல் 14 2012

புது டில்லி அவர் வாழ்ந்த வீட்டில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள். ஜவஹர்லால்நேரு பல்கலைக் கழக மாணவர்கள்.





நாட்டுப்புறப் பாடல் 1




 ஏரிக்கரை ஓரத்தில இளவட்டமாய் நிற்பவளே 
தேருமேல ஏறி வாரேன் திரவியமே உன்ன பார்க்க.. - அடி 
கண்டால் நானும் இருப்பேன். - உன்னை 
காணாமல் நான் துடிப்பேன்.

அத்தமக ரத்தினமே என் அழகுக்கிளி பெட்டகமே
சித்திரமே உன்னழக செதுக்குகிறேன் எந்தன் நெஞ்சில் 
தாகம் தீர்க்கும் குடமே - நீ 
தாவணிப் பூ மடமே 

வஞ்சியாளே உன் விழியால் வாலிபன் நான் வாடுறண்டி 
நெஞ்சமெல்லாம் நெறஞ்சவளே கெஞ்சிடுறேன் ஏத்துக்கடி 
வாசமுள்ள பூவே - இனி 
நீதான் எந்தன் வாழ்வே.

ஆவாரம் தோட்டத்தில ஆடி வரும் பூமயிலே
தேவாரம் பாடி வந்தேன் தேனே உன்ன பார்க்கும் முன்ன
உலவ நீயும் வாடி - என்
உசுரக் கொஞ்சம் தாடி