Saturday, 21 July 2012
Monday, 9 July 2012
உன் பெயரை மட்டும் சொல்லும்.
என்
மனதை
தினம்
கொள்ளும்
மாணிக்க
ரதமே
நீ
வீசும் வாசம்
அந்த
கணம்
ஒரு
நொடி நிற்கும்
என்
சுவாசம்.
உலகில்
எங்கோ
பறக்கிறேன்
பிரபஞ்சத்தில்
மிதக்கிறேன்.
மென்மை, பெண்மை
என்ற வருணனை
இல்லை
இல்லையென்ற போதும்
மனம்
விடாமல் துரத்திக்
கொல்லும்
தினமெனை.
அழகினை
அடைய
அடைந்து
கிடக்க
வழியினை
தேடுது
என்
உயிர்
விழியின்றி
வாடுது.
வசந்தத்தின்
ஊஞ்சல்
என்
நினைவோடு செல்லும்
ஒரு
நொடி நின்று
உன்
பெயரை மட்டும் சொல்லும்.
அன்புடன்
சோலைத் தென்றல் --
Saturday, 16 June 2012
புளிய மரப் பேருந்து
புளிய மரப் பேருந்து
வாரா வாராம் சுற்றுலாதான்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்
மூன்றாவது படிக்கும் போதே
டிரைவர் கண்டக்டர் ஆகிவிட்டோம்
போன ஊரே திரும்பவும்
சலித்ததில்லை ஒரு நாளும்
மேல்மா புளிய மரம் நிறுத்தம்
மேல்மா அம்பேத்கர் போர்டு நிறுத்தம்
பேருந்து குலுங்கியபடி செல்லும்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்
மேல்மா முதலியார் வீடு நிறுத்தம்
மேல்மா ஆச்சாரி வீடு நிறுத்தம்
மேல்மா கன்னியப்பன் கவுண்டன் டீ கடை நிறுத்தம்
வேகமாக குலுங்கும் கிளை
மேல்மா கூட்ரோடு வந்ததும் இறங்கி விடுவோம்
திரும்பவும் ஏறுவதற்குள்
கண்ணம்மா ஆயா
'உங்கள அள்ள துள்ள வாரிக்கினு போவ
வாந்தி பேதி வந்து தூக்கினு போவனு' கழுவி ஊத்த
நாலா மூலையா ஓடுவோம்,
புளிய மரம் இருந்த இடத்தில் இன்று
கண்ணம்மா ஆயா வீட்டு பாத்ரூம்
பார்த்து வெறிக்க முடிகிறது....
- கவிஞர். கலை அமரேசன்.
வாரா வாராம் சுற்றுலாதான்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்
மூன்றாவது படிக்கும் போதே
டிரைவர் கண்டக்டர் ஆகிவிட்டோம்
போன ஊரே திரும்பவும்
சலித்ததில்லை ஒரு நாளும்
மேல்மா புளிய மரம் நிறுத்தம்
மேல்மா அம்பேத்கர் போர்டு நிறுத்தம்
பேருந்து குலுங்கியபடி செல்லும்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்
மேல்மா முதலியார் வீடு நிறுத்தம்
மேல்மா ஆச்சாரி வீடு நிறுத்தம்
மேல்மா கன்னியப்பன் கவுண்டன் டீ கடை நிறுத்தம்
வேகமாக குலுங்கும் கிளை
மேல்மா கூட்ரோடு வந்ததும் இறங்கி விடுவோம்
திரும்பவும் ஏறுவதற்குள்
கண்ணம்மா ஆயா
'உங்கள அள்ள துள்ள வாரிக்கினு போவ
வாந்தி பேதி வந்து தூக்கினு போவனு' கழுவி ஊத்த
நாலா மூலையா ஓடுவோம்,
புளிய மரம் இருந்த இடத்தில் இன்று
கண்ணம்மா ஆயா வீட்டு பாத்ரூம்
பார்த்து வெறிக்க முடிகிறது....
- கவிஞர். கலை அமரேசன்.
Thursday, 14 June 2012
எழுச்சி
எம் தலைவா
எழுச்சித் தமிழ் மகனே
எழுந்து வரும் சூரியனே
எங்க நெஞ்சி வானத்துல
மொளைச்ச நட்சத்திரமே...
அங்கனுர் மண்ணுல
உதித்த என் ராசா
எங்கள காக்க வந்த
என் சேரி மகராசா
என் முறுக்கு மீசை காராமுன்னேறும் எந்தலைவா
உன் பேச்சு இடி முழக்கம்
பேரலையை வென்றுவிடும்
பார்ப்பனிய மண்ணிலே
பாராளுமன்றத்திலே
டெல்லி கோட்டையிலே
உன் உரைவீச்சு கேட்டுப்புட்டு
கன்னியாக்குமரிக் கடல்
கைத்தட்டி வாழ்த்துதடா....
-கவிஞர். கலை அமரேசன்.
வீறுகொண்ட அரிமா
முறுக்கு மீசையுடன்
முறைக்கும் பார்வையுடைய
புலியும் சிறுத்தையும்
உன்னை பார்த்து
பெருமை அடையுமா
பொறாமை கொள்ளுமா
தெரியவில்லை எனக்கு!
புகைபடத்தில் மாத்திரம்
கண்டு இருக்கிறேன்
புரட்சியாளர் அம்பேத்கரை
இப்பூமிக்கு புரியவைத்தாய்
இப்படிதான் இருந்திருபாரென்று
உன்னை கண்டு.
பாதிஉசிரு போயிருச்சு
சாதிக் கொடுமையில
மீதிஉசிரு உள்ளவரை
நீதி கிடைக்கும்வரை
போராடும் சிறுத்தை
உன்னை எண்ணி
மார்தட்டிக் கொள்வதைவிட
உன்னைப் போல
மீசைதொட்டு முறுக்கிவிடுவதிலேயே
பெருமை கொள்ளும்
எந்தன் கரம்.
பொடைக்குது நரம்பு
உம்பேரைச் சொல்லையிலே
சுண்டுது ரத்தம்
உம்பேச்சைக் கேட்கயிலே
பொங்குது வீரம்
உம்பின்னால் நடக்கையிலே
வீறுகொண்ட அரிமா
நம்ம அண்ணன்
திருமணமுடிக்கா திருமா!
-N.S.VINODJAGADISH.
Subscribe to:
Posts (Atom)
.jpg)


