Thursday, 9 August 2012

என்னை அறிதல்

உன்னை அடையாளம் 
காட்டமுடியவில்லை என்னால் 
உன் வெற்றிடத்தையும் 
நிரப்ப முடியவில்லை என்னால் 

நீ இருக்கிறாய் என்பதை மட்டும் 
உணர முடிகிறது 
தேடி அலைகிறேன் 
இந்த பிரபஞ்சம் முழுவதும் 
நினைவின் நீட்சி எல்லை தாண்டி செல்கிறது 
நீ இருந்தததற்கான 
அத்தனை தடயங்களையும் 
தூசு தட்டி பார்க்கிறேன். 

என் தனிமையை 
உன்னைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறேன் 
வனாந்தர உலகை காண்கிறேன். 
மூளை முழுக்க போதை 
காட்டாற்று வெள்ளம் போல் எண்ணங்களின் சீற்றம் 
ஓட்டம் கொள்ளத் துடிக்கிறேன் ஊர் ஊராய்
நீ என்னிலிருந்து வெளியேறும் வரை.

No comments:

Post a Comment