Wednesday, 8 August 2012

நகரத்து வாசல்


கண்முன்னே மாலை இருட்டிக் கொண்டிருக்கிறது
அசையாமல் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளை, மஞ்சள், சிகப்பு என

விளக்குகள் தெரிய ஆரம்பித்தன
சாலையில் வாகனங்களின் இரைச்சல்
காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
வீட்டிற்கு செல்வதில்
அனைவரும் மும்புரமாகி இருந்தனர்.

குருவிகள் அவைகளுக்குள் கொஞ்சியபடியே

பறந்து கொண்டிருக்கின்றன
வாயிற்படியில் அமர்ந்திருக்கிறேன்
என்னை நோக்கி கையசைக்கும்
ரெட்டைஜடை பின்னலிட்ட பெண்ணொருத்தி
தேநீர் கொண்டுவந்து குடிக்கச்சொல்லி
வற்புறுத்தும் என் மனைவி
விளையாடச் சென்ற பிள்ளைகளின்
வரவை எதிர்பார்த்தபடி நான்

உறக்கம் கண்களை தழுவத் தொடங்கிற்று.

செயலற்றவனாய் ரசித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வின் அத்தனை ரகசியங்களையும்.

No comments:

Post a Comment