Monday, 13 August 2012

எனது மேசையின் மீது புத்தகம்

மேசை மீது வைக்கப்பட்ட புத்தகம்
இன்னும் திறக்கப்படாமலே இருக்கிறது.
எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன
புதிய புத்தகங்கள் வர போக இருக்கின்றன
அதற்குத் துணையாக இதழ்களும் .


அடுக்கி வைக்கப்படும் சூழலில் மட்டும்
மனம் அடுக்கிக் கொள்கிறது
படிக்க வேண்டியதை,
எழுத வேண்டியதை
கட்டாயத்தின் பேரில் திருப்பப்படும்
புத்தகங்களின் குறிப்புகள் மட்டும் எழுதப்படுகிறது
வேறொன்றும் செய்ய முடியவில்லை

புத்தகங்கள் என்னைப் பார்த்து 
ஏளனமாய் சிரிப்பதை உணர்கிறேன்.
வாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது
இதைப் படிக்க வேண்டும், அதைப் படிக்க வேண்டும் என்று.
கைப் பேசியும் மடிக்கணினியும் 
கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்னை.

தீவிர வாசிப்பு
தீவிரமாய் குறைந்து போனது என்னில்.
விமர்சனங்களைப் படித்து 
விமர்சனம் பேசுபவனாய் இருக்கிறேன்.
நவீனம் சுறுசுறுப்பா? சோம்பலா?
விவாதங்கள் தேவையில்லை.
இருந்தும் 
செயல்படுவேன் என்ற நம்பிக்கையில் இன்றும்

No comments:

Post a Comment