
ஒவ்வொரு வரியாய்
என்னில் அழுத்திப் பதிக்கிறேன்
மீண்டெழுந்து வருகிறாய்
உன் எழுத்தின் ஊடாக..
என்னை வெளியேற்றி
உன்னை நிரப்பி
என்னைத் தேடுகிறாய்.
போராட்டம் தொடங்கிற்று
உனக்கும் எனக்கும்
உன்னோடு நானும் சேர்ந்து
என்னைத் தேடுகிறேன்.
தேடித் தேடித் திரிகிறோம்
தெருவெங்கும்
நாம் பதித்த சுவடுகள் மட்டும்
மிச்சமாய்
நமக்குப் பின்......
No comments:
Post a Comment